tamilnadu

img

ரஷ்ய விண்வெளி ஆய்வு நிலையம் செல்ல தஞ்சை மாணவர்கள் 9 பேர் தேர்வு

தஞ்சாவூர், ஏப்.12-  தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இணைய வழியில் ஏவுகலன் அறிவியல் (Rocket Science) பற்றிய பயிற்சி வகுப்புகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 15  மாணவிகளும், மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 7 மாண வர்களும் தேர்வாகி பயிற்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில், தொடர்ந்து பல்வேறு கட்ட பயிற்சி மற்றும் போட்டிகளுக்கு பிறகு,  75 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மே மாத இறுதியில் ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். இந்த 75 மாணவர்களில் பட்டுக் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி யைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவிகள் எஸ்.கலைமகள், எஸ்.கவுசல்யா, எஸ்.ஜீவிதா, ஏ.மகாதேவி, ஆர்.மகாலட்சுமி, பி.ஹரிசிதா, எஸ்.ஹரிணிப்பிரியா, எஸ்.ஜெயஸ்ரீ ஆகியோரும், மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர் வி.சந்தோஷ் என 9 பேர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார்,  ரஷ்யா செல்ல இருக்கும் மாணவர் வீ.சந்தோஷை பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.