tamilnadu

img

திண்டுக்கல்லில் தீக்கதிருக்கு 841 சந்தாக்கள் ரூ.11.64 லட்சம் அளிப்பு

திண்டுக்கல், ஜூலை 17 - ஜூலை 1 துவங்கி, மாநிலம் முழுவதும் தீக்கதிர் நாளிதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கம் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. இதனொரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் தீக்கதிர் 841 சந்தாக்களுக்கு உரிய தொகை- 11 லட்சத்து 64 ஆயிரத்து 150 ரூபாயை,  சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், என். பாண்டி ஆகியோரிடம் தீக்கதிர் பொறுப்பாளரும் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான டி. முத்துசாமி வழங்கினார். நிகழ்ச்சியில், திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. செல்வராஜ் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி. வசந்தாமணி, கே. அருள்செல்வன், கே. பிரபாகரன், தா. அஜாய் கோஷ், எம். ராமசாமி, ஜி. ராணி, எஸ். கமலக்கண்ணன், பி. ஆசாத் ஆகியோர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சரத்குமார், நகரச் செயலாளர் ஏ. அரபு முகமது மற்றும் இடைக்கமிட்டி செயலாளர்கள், முன்னணி ஊழியர்கள் பங்கேற்றனர்.