கோழிக்கோடு, ஜுலை 28 - இந்திய நாட்டிற்கு உள்ளேயும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் பயனடையும் வகையில் கேரள அரசால் அறிவிக்கப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை உலகத் தரத்தில் கோழிக்கோட்டில் உருவாகி வருகிறது. அமெரிக்காவின் மியாமி மாற்று அறுவை சிகிச்சை நிறு வனத்தைப்போன்று இது வடிவமைக் கப்பட உள்ளது. கோழிக்கோடு சேவாயூரில் உள்ள தோல்நோய் மருத்துவமனை வளாகத்தில் 20 ஏக்கரில் ரூ.500 கோடி செலவில் இந்தியாவின் முதல் மற்றும் உலகின் நான்காவது அரசு மருத்துவ மனை கட்டப்பட்டு வருகிறது. 150 சிறப்பு மருத்துவர்கள், 800 செவி லியர்கள் மற்றும் தொழில்நுட்ப பணி யாளர்கள் இருப்பார்கள். 22 சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளும் பரி சீலனையில் உள்ளன. ஏர் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிபேட் வசதி இருக்கும். 500 படுக்கைகள், பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. மருத்துவர்களுக்கு பெல்லோஷிப் வசதியும் வழங்கப்படும். சென்னை, கோயம்புத்தூர், வேலூர் மற்றும் பாண்டிச்சேரி மருத்து வமனைகளை நம்பியுள்ள கேரளா வில் உள்ள நோயாளிகள் அவற்றுடன் ஒப்பிடுகையில் 40 சதவிகித செலவில் சிகிச்சை பெறலாம். கேரளாவில் ஐந்து ஆண்டுகளில் செய்யப்பட்ட 235 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை களில் பெரும்பாலானவை தனியார் மருத்துவமனைகளில் செய்யப்பட்ட வையாகும்.
சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரை யீரல், கார்னியா, எலும்பு மஜ்ஜை, மூட்டு, முகம், தோல், தசை, கணை யம், குடல் போன்ற உறுப்புகளை இங்கு மாற்றலாம். புதுச்சேரி ஜிப்மர் நிறுவனத்தில் பேராசிரியராகவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணராகவும் உள்ள மலப்புரத்தைச் சேர்ந்தவர் பிஜு பொற்றேக்காடு சிறப்பு அதிகாரியாக உள்ளார். முறையான அறிவிப்புக்குப் பிறகு இறுதி வரைவு தயாரிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சரக அலுவலகம் தெரிவித்துள்ளது.