tamilnadu

img

ஸ்ரீபெரும்புதூர் தனியார் உணவக கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

சென்னை,அக்.21- சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் நோக்கிய ஆலை எதிரே அமைந்துள்ள தனியார் உணவகத்தின் கழிவு நீர் தொட்டியை சுத்தம்  செய்தபோது விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர் கள் பரிதாபமாக உயிரிழந்த னர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்-சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ் சாலையில் நோக்கியோ தொழிற்சாலைக்கு எதிரே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிரபல சத்யம்  கிராண்ட் தனியார் சொகுசு உணவகம். அங்கு கழிவு நீர் தொட்டி நிரம்பியதால், தனியார்  மூலம் கழிவு நீரை வெளியேற் றும் பணி வெள்ளியன்று (அக்.21) நடந்துள்ளது. அந்த பணியில் காஞ்சிபுரம் மாவட்டம் கட்சிப்பேடு பகுதியைச் சேர்ந்த  ரங்கநாதன் (51), நவீன் குமார் (18), திருமலை (31)  மூன்று பேர் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நாட்களாக திறக்கா மல் இருந்த தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விஷ வாயு தாக்கி யுள்ளது. இதனால் ரங்கநாதன் தொட்டிக்குள் மயங்கி  விழுந்துள்ளார். இதனைய டுத்து, அவரைக் காப்பாற்ற சக நண்பர்கள் இருவரும் முயற்சி செய்த பொழுது அடுத் தடுத்து தொட்டியில் மயங்கி விழுந்துள்ளனர். இந்த கழிவுநீர்  தொட்டியில் அதிக அளவு நீர்  இருந்ததால் மூன்று பேரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்தி லேயே துடி துடித்து உயிரிழந்த னர்.  இதுகுறித்து அந்த தனி யார் உணவகத்தின் நிர்வாகம்  ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலை யம்  மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள் ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல் மற்றும்  தீயணைப்பு துறையினர் கழிவு  நீரை முழுமையாக வெளி யேற்றி மூன்று தொழிலாளிக ளின் உடலையும் மீட்டெடுத்த னர். 

இருவர் கைது

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் விடுதி மேலாளர் முரளி மற்றும் ஒப்பந்ததாரர் ரஜினி  ஆகிய இருவரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

5 ஆண்டுகளில்  321 பேர் உயிரிழப்பு

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தபோது கடந்த 5  ஆண்டுகளில் நாட்டில் 321 பேர்  உயிரிழந்துள்ளனர் என்று மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.  மனிதர்களை கொண்டு கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்  செய்யும் முறையை ஒழித்து விட்டதாக சொல்லிக் கொண் டாலும் கடந்த ஆண்டுகளில் நாட்டில் ஆங்காங்கே சில  சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது  எத்தனை பேர் உயிரிழந்துள் ளார்கள் என்று கிரிஷ் சந்திரா (பகுஜன் சமாஜ்), கேசினேனி ஸ்ரீனிவாஸ் (தெலுங்கு தேசம்),  மாணிக்கம் தாக்கூர் (காங்கி ரஸ்) ஆகிய கட்சிகளின் உறுப் பினர்கள் மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விக்கு சமூக நீதிதித்துறை அமைச்சர்  வீரேந்திர குமார், இணை அமைச்சர் ராமதாஸ் அத் வாலே ஆகியோர் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள் ளனர். “ நாட்டில் மனிதக் கழிவு களை மனிதனே அள்ளுவதை தடை செய்வது, கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்வதில் இருக்கும் இலக்குகளை ஒன்றிய அரசு அடைய முடியும். கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணி கள், திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம்  செய்யும் போது நடந்த  விபத்துகளில் 321 தொழி லாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், மனிதக் கழிவுகளை அகற்றியபோது உயிரிழந்த தாக எந்த புகாரும் இல்லை. கழிவுநீர் தொட்டிகள், வழி காட்டி விதிகளின்படி முறைப் படி கட்டவில்லை என்ப தால்தான் இந்த விபத்துகள் நடந்துள்ளன. அதிகபட்சமாக 2019ஆம் ஆண்டில் 119 பேர்  உயிரிழந்துள்ளனர். 2020ஆம் ஆண்டில் 19 பேர் மட்டுமே உயி ரிழந்துள்ளனர். மனிதர்கள் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது” என்று தெரிவித்துள்ளனர்.