tamilnadu

img

எங்களின் ஈராயிரம் ஆண்டு மொழி வரலாறு! ­- சு.வெங்கடேசன் எம்.பி

உங்களை எதிர்த்ததுதான் எங்களின் ஈராயிரம் ஆண்டு மொழி வரலாறு என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
“தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் செல்வாக்குமிக்க மொழியாக இருந்தது என்று ஆளுநர் கூறியுள்ளார்.
வடமொழிகளாகிய பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய  மூன்றுக்கும் தமிழ்நாட்டு அறிவுப் புலத்தில் செல்வாக்குண்டு. ஏனென்றால் இது ஈராயிரம் ஆண்டாக “கல்விற் சிறந்த தமிழ்நாடு”
பாலியையும் பிராகிருதத்தையும் விட்டுவிட்டு சமஸ்கிருதம் மட்டும் செல்வாக்குச் செலுத்தியது என்று சொல்லும் போதே நீங்கள் யாரென்பதையும் சொல்லவிடுகிறீர்கள்.
உங்களை எதிர்த்ததுதான் எங்களின் ஈராயிரம் ஆண்டு மொழி வரலாறு. நாங்கள் எங்களின் ஈராயிரம் ஆண்டைக் கொண்டாடுகிறோம். நீங்கள் ஒற்றை மாதத்தைக் கொண்டாடிக்கொள்ளுங்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.