tamilnadu

img

ரூ.2,696 கோடி நிதியை உடனே விடுவித்திடுக!

ஒன்றிய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை, அக். 27 - தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழி லாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 2 ஆயிரத்து 696  கோடியே 77 லட்சம்- மொத்த ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று, ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இடதுசாரிகள் முன்னெடுத்த வறுமை ஒழிப்புத் திட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளின் தொடர் முயற்சி மற்றும்  போராட்டத்தின் விளைவாக, மன்மோகன் சிங் தலைமை யிலான ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1’ ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம். கிராமப்புற வறுமை ஒழிப்பில் இப்போது வரை முக்கியப் பங்காற்றி வருகிறது. 

நிதி ஒதுக்கீட்டைக்  குறைத்த மோடி அரசு

ஆனால், மோடி தலைமை யிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின், இத்திட்டத்தை நிறுத்தி  விடும் முயற்சியாக, நிதி ஒதுக் கீட்டைக் குறைத்து வருகிறது. 2022-2023 நிதியாண்டில் ரூ. 89 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என  எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ. 73 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி யது.  2023 -2024 பட்ஜெட்டில் இதை யும் குறைத்து, வெறும் ரூ. 60 ஆயி ரம் கோடியை மட்டுமே பாஜக  அரசு ஒதுக்கியது. இது, முந்தைய ஆண்டு வழங்கப்பட்ட ரூ. 73 ஆயிரம் கோடியை விட 18 சதவிகிதமும் எதிர்பார்க்கப்பட்ட ரூ. 89 ஆயிரம் கோடியை விட 33 சதவிகிதமும் குறைவாகும். இதனால் அந்த ஆண்டில் நாடு முழுமைக்குமான சம்பளப் பாக்கி மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடியாக இருந்தது. இவ்வாறு நிதியை வெட்டிச் சுருக்கி வருவதால், இத்திட்ட த்தின் செயல்பாடு  மிக மோசமான சூழலுக்கு சென்று, தற்போது தமிழ்நாடு உள்பட 21 மாநிலங் களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முற்றிலும் முடங்கும் அபா யம் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதி ராக நாடு முழுவதும் போராட்டங் கள் நடைபெற்று வருகின்றன. 

91.52லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

இந்தப் பின்னணியிலேயே முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது: “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தினைச் செயல்படுத்துவதில், பல்வேறு அளவுகோல்களின்கீழ் தமிழகம் எப்போதும் சிறந்த மாநி லமாகத் திகழ்கிறது. தமிழ கத்தில் 92.86 லட்சம் குடும்பங் களுக்கு பணி அட்டை வழங்கப் பட்டுள்ளது. இதில், 76.15 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 91.52 லட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் விவசாயம், தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவ மழையையே பெரிதும் நம்பி யிருக்கும் நிலையில், இவற்றில் மாறுபாடுகள் ஏற்படும் சூழலில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி களுக்கு அதிக தேவை ஏற்படு கிறது.

பறிபோகும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கிராமப் புறங்களில் உள்ள முதியோர்கள், ஆதரவற்ற பெண்கள், குடும்பத் தலைவிகள், மாற்றுத் திறனாளி கள் போன்றோருக்கு முக்கிய மானதொரு வாழ்வாதாரமாக இருக்கிறது.  குறிப்பாக விவசாயம் நலி வடைந்த பருவத்தில், கிராமப் புறங்களில் உள்ள பலருக்கு கூடு தல் வாழ்வாதார வாய்ப்பாகவும் கருதப்படுகிறது. இந்தத் திட்ட த்தில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பெண்களாக இருப்பதாலும், அவர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுவதாலும், அவர் களின் நிதிநிலை மற்றும் வாழ்வா தாரம் பெரிதும் மேம்பட்டுள்ளது. தமிழகத்தில், 2023-2024 ஆம்  ஆண்டில் 40 கோடி மனித நாட்கள் தேவைப்படும் நிலையில், இது வரை, 28 கோடி மனித நாட்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 23-10-2023 வரை, 66.26 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 76.06 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதன் மூலம், தமிழகம் 31.15 கோடி மனித நாட்களை எட்டியுள்ளது.

ஒன்றிய அரசு இழுத்தடிக்கும் நிதி ரூ. 2,696 கோடி 

2023-2024 நிதியாண்டில், 19.7.2023 வரை, தொழிலாளர் களுக்கு திறன்சாரா ஊதியத்துக் காக ரூ. 4 ஆயிரத்து 903 கோடியே 25 லட்சத்தை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 25.9.2023 அன்று ஆயி ரத்து 755 கோடியே 43 லட்சம் ரூபாய், திறன்சாரா ஊதியம் வழங்குவதற்காக ஒன்றிய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. எனினும் அனு மதிக்கப்பட்ட தொகையில் ரூ. 418 கோடியே 23 லட்சம் மட்டுமே விடு விக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள  ரூ. ஆயிரத்து 337 கோடியே 20 லட்சம், தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட வில்லை. அதோடு, அதற்குப் பிறகான வாரங்களுக்கான ஊதியத்திற்கு உரிய ரூ. ஆயிரத்து 359 கோடியே 57 லட்சம் நிலு வைத் தொகையும் இன்னும் வழங்கப்படவில்லை.  20-10-2023 நிலவரப்படி, தமிழ கத்தில் தொழிலாளர்களின் ஊதிய நிலுவை ரூ. 2 ஆயிரத்து 696.77 கோடி ஆகும்.

மக்களிடமிருந்து வரும் கோரிக்கைகள்

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 17.10.2023 அன்று, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு நான் ஆய்வுப் பயணம் மேற்கொண்டேன். அப் போது, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப் பட வேண்டிய ஊதியத்தை உட னடியாக வழங்கிட வேண்டும் என  பொது மக்களும், மக்கள் பிரதிநிதி களும் என்னிடம் கோரிக்கை விடுத் தனர். இதேபோன்ற கோரிக்கை திருவண்ணாமலை மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போதும் எனக்கு வந்தது. எனவே, மேற்குறிப்பிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழி லாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 2 ஆயிரத்து 696  கோடியே 77 லட்சம்- மொத்த ஊதிய நிலுவைக்கான தொகை யை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், திறன்சாரா தொழி லாளர்களுக்குத் தொடர்ந்து கூடுதல் நிதி விடுவிக்கப்பட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.