‘நவ கேரளத்துக்கான புதிய பாதைகள்’ ஆவணத்தை பினராயி விஜயன் சமர்ப்பிக்கிறார்
ம்.வி.கோவிந்தன் தகவல் திருவனந்தபுரம், மார்ச் 1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு மார்ச் 6 முதல் 9 வரை, கொல்லத்தில் நடைபெற உள்ளது. கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினரும், மத்தி யக்குழுவின் ஒருங்கிணைப்பாளரு மான பிரகாஷ் காரத் மாநாட்டைத் துவக்கி வைக்க உள்ளார். இந்நிலையில், மாநில மாநாட்டில் ‘நவ கேரளத்துக்கான புதிய பாதை கள்’ என்னும் ஆவணத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் சமர்ப்பிக்க உள்ளதாக, கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திருவனந்தபுரத்தில் வெள்ளியன்று (பிப். 28) செய்தியா ளர்களுக்கு எம்.வி. கோவிந்தன் பேட்டி யளித்தார். அப்போது, “நவகேரள வளர்ச்சிக்கான குறிப்பு கடந்த மாநாட் டின்போது விரிவாக ஆய்வு செய்து தயாரிக்கப்பட்டது. புதிய சூழ்நிலை யில், தேவைப்படும் மாற்றம் தொடர் பாக பிரதிநிதிகள் விரிவான விவாதம் மேற்கொள்வார்கள். அதன் அடிப்ப டையில், இறுதி அறிக்கை தயாரிக் கப்படும்.
அதில் மூன்றாம் எல்டிஎப் அர சாங்கத்திற்கு வழிகாட்டும் ஒரு தொலைநோக்குப் பார்வை வெளிப் படும்” என்று அவர் தெரிவித்தார். கொடிப் பயணம் துவங்கியது முன்னதாக, கொல்லம் மாநாட்டு வளாகத்தில் ஏற்றவுள்ள கொடியின் பயணம் கையூரில் இருந்து சனிக்கிழ மையன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. தேஜஸ்வினிக்கரை யில் உள்ள தியாகிகள் மண்டபத்தில் மலர் அஞ்சலி செலுத்தியதைத் தொட ர்ந்து தியாகிகள் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், பயணக்குழு தலை வரும் மாநில செயற்குழு உறுப்பினரு மான எம். ஸ்வராஜிடம் கொடியினை எடுத்துக் கொடுத்தார். மார்ச் 2 ஞாயிறன்று மாநில செயற் குழு உறுப்பினர் பி.கே.பிஜு தலை மையில் ‘தியாகச்சுடர்’ பயணத்தை வயலாரில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ. விஜயராகவன் துவக்கி வைக்கிறார். மத்தியக்குழு உறுப்பினர் சி.எஸ். சுஜாதா தலைமையிலான கொடிமர பயணத்தை மார்ச் 5-ஆம் தேதி சூரநாட்டில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி துவக்கி வைக்க உள்ளார்.