‘அவசர நிலையின் 50-ஆவது ஆண்டும், மோடி அரசின் அறிவிக்கப்படாத அவசர நிலையும்’‘அவசர நிலையின் 50-ஆவது ஆண்டும்,
மோடி அரசின் அறிவிக்கப்படாத அவசர நிலையும்’
‘அவசர நிலையின் 50-ஆவது ஆண்டும், மோடி அரசின் அறிவிக்கப்படாத அவசர நிலையும்’ என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று திருச்சிராப்பள்ளியில் கருத்தரங்கம் நடந்தது. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் அசோக் தாவ்லே, கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ். ஸ்ரீதர், மாநிலக்குழு உறுப்பினர் எம். ஜெயசீலன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.