tamilnadu

img

அபெகா பண்பாட்டு இயக்கம் சார்பில் ‘அறிவோம் மார்க்ஸை’ பயிற்சி முகாம்

அபெகா பண்பாட்டு இயக்கம் சார்பில் ‘அறிவோம் மார்க்ஸை’ பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, மே 25-  அபெகா (அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ்) பண்பாட்டு இயக்கம் சார்பில் ‘அறிவோம் மார்க்ஸை’ என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது. மே 24, 25 தேதிகளில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் கே.எம். சரீப் தொடங்கி வைத்தார். ‘இன்றைய இந்திய வாழ்பில் மார்க்சியம்’ என்ற தலைப்பில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, ‘பேராசான் தந்த மூலதனம்’ என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பாளர் தியாகு, ‘மார்க்ஸ் - இளமை, கல்வி மற்றும் தன்னுருவாக்கம்’ என்ற தலைப்பில் அபெகா நிறுவனர் மருத்துவர் நா.ஜெயராமன் ஆகியோர் உரையாற்றினர்.  ‘ஓங்கி முழங்கிய ரஷ்யப் புரட்சி’ என்ற தலைப்பில் தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர் களப்பிரன், ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - இன்றும் பெருவிசை’ என்ற தலைப்பில் கவிஞர் எஸ். கவிவர்மன், ‘மார்க்ஸ் - ஏங்கல்ஸ்’ உன்னத நட்பு என்ற தலைப்பில் தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி. பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.