மகாராஷ்டிரா மாநிலத்தில், கோவிட்-19 பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உட்பட 3,500கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,860 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,587 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் கோவிட்-19 பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், போலிஸ் அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் என 3,500கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
அம்மாநிலத்தில், 500 மருத்துவர்களும் கோவிட்-19 தொற்று இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. குறைந்தது 5 மருத்துவர்கள் நோய் தொற்றால் மரணமடைந்துள்ளனர். அதேபோல் நேற்றைய நிலவரப்படி, 1,527 காவல்துறை அதிகாரிகளுக்கு, நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை 29 பேர் மரணமடைந்துள்ளனர்.
அதே போல், ஜான் சுவஸ்தா அபியம் தகவலின் படி, செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், 1500 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.