tamilnadu

img

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் ராங்கி - சிராக் ஜோடி

கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் டொயோட்டா ஓபன் என்ற பெயரில் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.  2.43 கோடி ரூபாய் (அனைத்து பிரிவுகளுக்கும்) பரிசுத்தொகை கொண்ட இந்த தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திரங்கள் அனைவரும் வெளியேறிவிட்ட நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவில் ராங்கி ரெட்டி - சிராக் செட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ராங்கி ரெட்டி - சிராக் செட்டி ஜோடி தனது காலிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவின் சோய் - சியோ ஜோடியை 21-17, 17-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.  அரையிறுதியில் மற்றொரு தென் கொரியா ஜோடியான கோ ஸுங் - ஷின் பயக் ஜோடியை எதிர்கொள்கிறது.