பெங்களூரு:
பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக போலிச்சாமியார் நித்தியானந்தாவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த ஜாமீனை ரத்துசெய்த கர்நாடக ராம்நகர் நீதிமன்றம், அவருக்கு எதிராகதேடுதல் வாரண்ட் பிறப்பித்துள்ளது.நித்தியானந்தா தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறிமுன்னாள் பெண் சீடர் ஒருவர், 2010 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜாமீன்பெற்றிருந்த நித்தியானந்தாவுக்கு எதிராக கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.இந்த நிலையில் இந்தவழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, நித்தியானந்தா எங்குள்ளார் என்ற தகவல் கிடைக்காததால் கைது செய்யமுடியவில்லை என்று கூறிய காவல்துறை அதிகாரிகள், தேடுதல் வாரண்ட் பிறப்பிக்குமாறு முறையிட்டனர்.இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நித்தியானந்தாவிற்கு எதிராக தேடுதல் வாரண்ட் பிறப்பித்தது.