tamilnadu

img

சிறப்பு அந்தஸ்தை பறிக்க முயன்றால் போராட்டம் வெடிக்கும்

மத்திய அரசுக்கு காஷ்மீர் தலைவர்கள் எச்சரிக்கை

ஸ்ரீநகர், ஆக.4- காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பறிக்க முயன்றால் பெரும் போராட்டம் வெடிக்கும் என, காஷ்மீர் அரசியல் தலைவர்கள் எச்ச ரித்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய மாநாட்டு கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டம் ஸ்ரீநக ரில் உமர் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. 4 மணி நேரம் நடை பெற்ற கூட்டத்தை அடுத்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நில வும் சூழ்நிலை குறித்து இந்த கூட்டத் தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநி லத்தில் குறிப்பாக காஷ்மீர் பிராந்தி யத்தில் நிலவும் உறுதிப்படுத்தப்படாத மற்றும் பதற்றமான சூழ்நிலை குறித்து கவலையை வெளிப்படுத்துகிறோம். காஷ்மீரில் தற்போது உருவாக்கப்பட் டுள்ள புதிரான சூழ்நிலையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம். அதோடு உள்ளூர் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த அவசர நடவடிக்கைகளை யும் எடுக்க வேண்டும். மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பறிக்க முயன்றால் போராட்டம் வெடிக்கும். மாநிலத்தின் நலனை பாது காக்க நாடாளுமன்றத்திலும், நாடாளு மன்றத்துக்கு வெளியிலும் எந்த முயற்சி யையும் மேற்கொள்வோம். மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை சிதைக்க அனுமதிக்க மாட்டோம்” என் றார்.