tamilnadu

img

பாஜக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் கூட்டம் போட்ட உயர்சாதியினர்.. ஹத்ராஸ் குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிக்கை...

லக்னோ:
ஹத்ராஸ் தலித் இளம்பெண் வன்கொலை வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற உ.பி. பாஜக அரசு ஆரம்பம் முதலே முயற்சித்து வருகிறது. 

அந்த வகையில், பாஜக முன்னாள்எம்.எல்.ஏ. ராஜ்வீர் சிங் பெஹல்வான்தனது வீட்டிலேயே உயர் சாதியினரின் கூட்டத்தைக் கூட்டி, குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். 800 பேர்வரை இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள நிலையில், இதனைஉயர்சாதியினர் கூட்டம் என்று கூறுவதை மட்டும் பெஹல்வானின் மகன்மஹாவீர் சிங் மறுத்துள்ளார். அனைத்துத் தரப்பினரும் வந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும், இந்தக் கூட்டம் குறித்து,மஹாவீர் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார். அதில், “குற்றம் செய்துவிட்டு யாராவது வீட்டில் இருப்பார் களா?. ஆனால், ஹத்ராஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை, போலீசார் அவர்களின் வீட்டில்தான் கைது செய்துள்ளனர். அவர்கள் குற்றம் இழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதற்கும், அவர்கள் நிரபராதிகள் என்பதற்கும் இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?” என்று கேட்டுள்ளார்.

மேலும், “குற்றம்சாட்டப்பட்டவர்கள் எந்த ஒரு விசாரணையையும் ஏற்கத் தயாராக உள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள்தான் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேஇருக்கின்றனர். அவர்களுக்கு உண்மை அறியும் சோதனையும் வேண்டாம், சிபிஐ விசாரணையும் வேண்டாமாம். இப்போது வேறு விசாரணை கேட்கிறார்கள்...” என்றும் கேலி செய் துள்ளார்.தலித் பெண் குடும்பத்தினரை உ.பி. போலீஸ் மற்றும் அந்த மாவட் டத்தின் ஆட்சியர் கடுமையாக மிரட்டிவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், பாஜக முன்னாள் எம்எல்ஏ வீட்டிலேயே உயர்சாதியினர் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் குடும்பம் வசிக்கும் கிராமத்திலிருந்து 8-9 கி.மீ. தூரத்தில்தான் பாஜக முன்னாள் எம்எல்ஏ ராஜ்வீர் சிங் பெஹல் வான் வீடு உள்ளது.