tamilnadu

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,870 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும் 186 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த இந்தியாவில் தற்போது  21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்தியாவில் இன்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,870 உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 186 ஆக உயர்ந்துள்ளது என்று தி இந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி,இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  149-ல் இருந்து 166 ஆக உயர்ந்துள்ளது. 
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழகம் 2 வது இடத்திலும் உள்ளது.