tamilnadu

img

காங்கிரஸ் கட்சியில் சரத் யாதவ் மகள்...  அதிர்ச்சியில் ஐக்கிய ஜனதா தளம் 

பாட்னா 
நாட்டின் வடக்கு பகுதி மாநிலமான பீகாரில் வரும் 28-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா பதற்றத்துக்கு இடையே நடத்தப்படும் இந்த தேர்தலில் பாஜக - நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் என ஒரு அணியும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் - காங்கிரஸ் - இடதுசாரிகள் போன்ற கட்சிகள் என்ற அடங்கிய மெகா கூட்டணி என மற்றொரு அணியும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. அரசியல் ஆதாயத்துக்காக லோக் ஜன சக்தி சக்தி தனித்து போட்டியிடுகிறது. இந்த கட்சியில் பாஜக உறுப்பினர்கள் சம்மந்தமில்லாமல் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவரும், லோக்தந்திரிக்  ஜனதா தளம் கட்சியின் தலைவருமான சரத் யாதவின் மகள் சுபாஷினி யாதவ் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இந்த சம்பவத்தால் லோக்தந்திரிக் ஜனதா தள கட்சியை விட ஐக்கிய ஜனதா தள கட்சி பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. காரணம் தந்தையின் செல்வாக்கு பெருமளவு சுபாஷினியிடம் இருப்பது தான். 

இதேபோல லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், முன்னாள் எம்பி-யுமான  காளி பாண்டேவும் காங்கிரஸில் இணைந்துள்ளார். தங்களை நம்பி வந்த காங்கிரஸ் கட்சி இருவருக்கும் தொகுதி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து சுபாஷினி யாதவ் அளித்த பேட்டியில்,"எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு  நன்றி. உடல் நிலை சரியில்லாத காரணத்தால் எனது தந்தையால் தேர்தலில் செயல்பட வில்லை. இருப்பினும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பீகார் மாநிலத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதே எனது பொறுப்பு என்று கூறினார்.