புதுதில்லி:
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என்று இந்திய மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டி.சி.ஜி.ஐ)ரஷ்ய அரசின் செய்தி நிறுவனமான ஸ்பூட்னிக்கிடம் தெரிவித்துள்ளது.ஹைதராபாத்தைச் சேர்ந்த ரெட்டீஸ் ஆய்வகத்துக்கு, ரஷ்யாவின் நேரடி முதலீட்டுநிதியம், ஸ்பூட்னிக் வி தடுப்பூசி மருந்தின் 100 மில்லியன் டோஸை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கடந்த மாதம் தெரிவித்தது. ரஷ்ய மருந்தின் தரவுகளை ஒரு உயர் மட்ட குழு பரிசீலித்து வருவதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் டி.சி.ஜி.ஐ-யின் நிபுணர் குழு, ஸ்பூட்னிக் வி-இன்இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் நடத்துவதற்கு டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கக் கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தது. இருப்பினும், சோதனை நடத்தப்படும் நாள் மற்றும் நேரம் குறித்து அந்நிறுவனத்தால் தீர்மானிக்கப்படவில்லை.இந்நிலையில் இந்தியாவில் இரண்டாம் கட்டமாக 100 தன்னார்வலர்களுக்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசியைச் செலுத்தி பரிசோதனைசெய்யப்பட உள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது.