tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல் குழப்பம் நீடிப்பு

உச்சநீதிமன்றம்  இன்று தீர்ப்பு

  • உள்ளாட்சித் தேர்தலை இத்தனை ஆண்டுகளாக ஏன் நடத்தவில்லை?
  • எதற்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன?
  • பழைய நிலையே தொடரும் என்றால் எப்படி புரிந்து கொள்வது?

புதுதில்லி,டிச.5-   தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த  தயாராக இருப்பதாக தமிழ்நாடு  மாநில தேர்தல் ஆணையம் தெரி வித்துள்ள நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பா ணைக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் வெள்ளியன்று தீர்ப்பளிக்கிறது. முன்னதாக உள்ளாட்சித் தேர்தலை இத்தனை ஆண்டுகளாக ஏன் நடத்தவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதி களில் இரண்டு கட்டங்களாக தேர்தல்  நடத்தப்படும் என்று தேர்தல் ஆணை யம் அறிவித்தது. வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளி) துவங்குகிறது. இந்நிலையில் உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வார்டு மறுவரையறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.  திமுகவின் மனு மற்றும், 5 புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் சார்பில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதி மன்றத்தில் வியாழனன்று நடை பெற்றது.

விசாரணையின் போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யத்திடம்  உச்சநீதிமன்ற நீதிபதி கள் சரமாரியாக கேள்விகளை எழுப் பினர். புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டால் வார்டுகளை மறு வரையறை செய்ய வேண்டாமா? புதிய மாவட்டங்களில் மறுவரை யறை பணிகள் முடிக்காவிடில் குழப்பம் ஏற்படாதா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். புதிதாக மாவட்டங்களை பிரிக்கும்போது வார்டு மறுவரை யறை அவசியம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அறிவுறுத்தினார். அப்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறி ஞர் கூறுகையில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப் படையில் வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன.  அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்படும் போதுதான் புதிய மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை செய்ய முடியும் என்று வாதிட்டார்.

பழைய தொகுதி மறுவரை யறை பணிகளை தான் மீண்டும் கொடுத்திருக்கிறோம் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், எதற்காக மாவட்டங் கள் பிரிக்கப்பட்டன? பழைய நிலையே தொடரும் என்றால் எப்படி  புரிந்து கொள்வது? மூன்று மாவட்டங் களுக்கு ஒரே மாவட்ட பஞ்சாயத்தா? இத்தனை ஆண்டுகள் ஏன் தேர்தல் நடத்தாமல் இருந்தீர்கள்?  என நீதி பதிகள் சரமாரியான கேள்விகளை தொடுத்தனர்.  திமுக தரப்பு வழக்கறிஞர், உரிய சட்ட முறைகளை கடைப்பிடிக்காமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதி காரிதான், வார்டு மறுவரையறை அதிகாரியாகவும் உள்ளார். மறு வரையறை பணிகள் மேற்கொள்ளப் பட்ட போது புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படவில்லை. வார்டு மறுவரையறை பணிகளை முடிக்கா மல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தபிறகு நீதிமன்றத்தினால் தேர்தலை ரத்து செய்ய முடியாது. ஆனால், தேவைப்பட்டால் எங்க ளால் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் என்று கூறினர். தடை விதித்தால் ஊரக உள்ளா ட்சித் தேர்தலுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்குமாறும், இல்லையேல் குழப்பம்தான் ஏற்படும் என்றும் திமுக வழக்கறிஞர் வாதிட்டார். புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்ட ங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடி யுமா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்தும், நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தொடர்பாகவும், பிற்பகல் 2 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 2.15 மணியளவில், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு , உச்சநீதிமன்ற கருத்துப்படி, 9 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராக இருப்ப தாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்தது. இதற்கு, திமுக தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும், விளக்கங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்,  தீர்ப்பை வெள்ளியன்று ஒத்திவைத்தனர்.