சென்னை,நவ.23- பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதன்படி சென்னையில் பெட்ரோல் விலை சனிக்கிழமையன்று லிட்டர் ஒன்றுக்கு 9 காசுகள் உயர்ந்து ரூ.77.38-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.