tamilnadu

img

அதானி வசம் போயின மங்களூரு, லக்னோ விமான நிலையங்கள்... 50 ஆண்டுக்கு மோடி அரசு குத்தகைக்கு விட்டது...

புதுதில்லி:
மோடி அரசின் தனியார்மய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மங்களூரு, லக்னோ, அகமதாபாத் விமான நிலையங்கள், அதானிகுழுமத்திற்குத் தாரை வார்க்கப் பட்டுள்ளன.அகமதாபாத், ஜெய்ப்பூா், மங்களூரு, திருவனந்தபுரம் மற் றும் கவுகாத்தி ஆகிய 6 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட மோடி அரசு முடிவு செய்தது. இதற்கான ஏலத்தையும் நடத்தியது.2020 பிப்ரவரி 14 அன்று மங்களூரு, லக்னோ, அகமதாபாத்ஆகிய மூன்று விமானநிலையங் களை ஏலத்தில் எடுத்த நிறுவனம், கடந்த செப்டம்பரில், ஜெய்ப்பூா், கவுகாத்தி, திருவனந்தபுரம் விமான நிலையங்களையும் ஏலத்தில் கைப்பற்றியது.இதன்படி அக்டோபர் 31 அன்றுமங்களூரு, விமான நிலையமும், நவம்பர் 2 அன்று லக்னோ விமானநிலையமும்  அதிகாரப்பூர்வமாக அதானி குழுமத்திடம் ஒப்படைக் கப்பட்டு உள்ளன. இதையடுத்து, அகமதாபாத் விமான நிலையம், நவம்பர் 11 அன்று, அதானி குழுமம் வசம்ஒப்படைக்கப்படும் என்று இந்தியவிமான நிலையங்கள் ஆணையம்(Airports Authority of India - AAI) தெரிவித்துள்ளது.