காசிரங்கா தேசிய பூங்கா அக்டோபர் 21 முதல் சுற்றுலாப்பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா நோய் தொற்றால் அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 21 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
அவை;
முகமூடி அணிவது, தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவை பின்பற்றப்பட வேண்டும்.
10 வயதுக்குக் குறைவான குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜீப் சஃபாரிகள் மட்டும் அனுமதிக்கப்படும், மேலும் ஒவ்வொரு பயணத்திற்கும் பின்னர் வாகனங்களின் டயர்கள் சுத்தப்படுத்தப்படும்.
அனைத்து சுற்றுலாப் பயணிகளும் ஒரு ஸ்கிரீனிங் செயல்முறைக்கு செல்ல வேண்டியிருக்கும், மேலும் கொரோனா தொடர்பான அறிகுறிகளான உயர் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவற்றைக் கண்டறிந்தவர்களை உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.