tamilnadu

img

நாடு முழுவதும் கொரோனாவிற்கு இலவச தடுப்பூசி கிடைக்க வேண்டும்... அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து...

புதுதில்லி:
தில்லியின் சாஸ்திரி பூங்கா மற்றும்சீலாம்பூர் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள இரு புதிய மேம்பாலங் களைத் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுமக்கள் சேவைக்கு திறந்து வைத்தார். 

அப்போது அவர் செய்தியாளர் கள் சந்திப்பில் கூறியதாவது:- 
பாலங்கள் திறக்கப்பட்டதால் தற்போது மக்கள் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை எதிர்கொள்ள மாட்டார்கள். ரூ. 250 கோடியில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.கோவிட்-19 தடுப்பூசி நாட்டு மக்கள்
அனைவருக்கும் கிடைக்க வேண் டும். இது அனைவருக்குமான உரிமை.இந்திய மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவேநாட்டு மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்றார்.