tamilnadu

img

முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டு சிறை... வாஜ்பாய் ஆட்சியில் நடந்த நிலக்கரி சுரங்க ஊழல்

புதுதில்லி:
வாஜ்பாய் ஆட்சியில் நடந்தநிலக்கரி ஊழலில், மத்திய முன்னாள் அமைச்சர் திலீப் ராய்க்கு,மூன்றாண்டுகள் சிறைத்தண் டனை விதித்து, தில்லி சிபிஐ சிறப்புநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

1999-ஆம் ஆண்டு, வாஜ்பாய்ஆட்சியின்போது, ஜார்க்கண்ட் மாநிலம், கிரித் பகுதியில் உள்ளபிரம்மாதியா நிலக்கரி சுரங்கத்தை கேஸ்ட்ராஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு (சிடிஎஸ்) ஒதுக்கீடு செய்த வழக்கில் ஊழல்நடந்ததாகப் புகார் எழுந்தது.இந்த சுரங்கத்தை விதிமுறைகளுக்குப் புறம்பாக கடந்த 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதிநிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்த திலீப் ராய்சிடிஎஸ் நிறுவனத்துக்கு ஒதுக் கீடு செய்திருந்தார்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2012-ஆம் ஆண்டுசெப்டம்பரில் திலீப் ராய்க்கு எதிராக வழக்குப் பதிவுசெய்த சிபிஐ, 2017 ஏப்ரலில்தான் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.அதன்பின்னர், நான்காண்டு விசாரணைக்குப் பிறகு, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் திங்களன்று தீர்ப்பளித்துள்ளார்.அதில், “நிலக்கரிச் சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ததில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் முறைகேடாக ஒதுக்கீடு செய்தகுற்றத்திற்காக, மத்திய முன் னாள் அமைச்சர் திலீப் ராய், நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் பிரதீப் குமார் பானர்ஜி,நித்யானந்த் கவுதம், கேஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் மகேந்திர குமார் அக்ராவாலா ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைவிதிக்கப்படுகிறது. மேலும்,இவர்கள் தலா ரூ.10 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.ஒடிசாவின் பிஜூ ஜனதாதளம் கட்சியை நிறுவியவர்களில் ஒருவரான திலீப் ராய், பின்னர்அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து செயல்பட்டு வந்தார்.