தில்லியில் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தி யாவை மதரீதியாக பிளவு படுத்தும் முயற்சிக்கு எதிராக நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சங்பரிவார் கூட்டம் போராடுப வர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையை கட்ட விழ்த்துவிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 23ம் தேதி தில்லியில் அமைதியாக நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது சிஏஏ ஆதரவாளர்கள் என்ற பெயரில் அங்கு வந்த கும்பல் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 3 நாட்களாக நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.