சீனாவின் உகான் பகுதியில் ஏற்பட்ட கொரேனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து மார்ச் 24 ம் தேதி தொடங்கி வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக உள்நாட்டை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என உலக வங்கி தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவில் ஊரடங்கால் கிட்டத்தட்ட 4 கோடி உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் குடியேறிய தொழிலாளர்கள் பெரும் பகுதியினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு சில நாட்களில் சுமார் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை நகர்ப்புறங்களிலிருந்து கிராமப்புறங்களுக்குச் சென்று உள்ளனர். கொரோனா ஊரடங்கு நெருக்கடி மூலம் தொழிலாளர்கள் உள் இடம்பெயர்வின் அளவு சர்வதேச இடம்பெயர்வுகளை விட இரண்டரை மடங்கு அதிகம் ஆகும். ஊரக வேலை இழப்பு மற்றும் சமூக தொலைவு ஆகியவை இந்தியாவிலும் லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளிலும் உள் குடியேறுபவர்களுக்கு பெருமளவில் திரும்புவதற்கான குழப்பமான மற்றும் வேதனையான செயல்முறையைத் தூண்டியது.
இத்தகைய புலம்பெயர்தொழிலாளர்களின்சுகாதார சேவைகள் மற்றும் பண பரிமாற்றம் மற்றும் பிற சமூக திட்டங்களில் அவர்களைச் சேர்ப்பதன் மூலமும், பாகுபாட்டிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதன் மூலமும் மாநில அரசுகள் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் நெருக்கடி தெற்காசியா பிராந்தியத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு இடம்பெயர்வுகளை பாதித்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு அனுமதி கோரும் குறைந்த திறமையான புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை எட்டு சதவீதம் அதிகரித்து 2019 ல் 368,048 ஆக உள்ளது.
பாகிஸ்தானில் எண்ணிக்கை 2019 ல் 63 சதவீதம் உயர்ந்து 6,25,203 ஆக உள்ளது, இது பெரும்பாலும் சவூதி அரேபியாவில் குடியேறுவது இரட்டிப்பாகும். 2019 ஆம் ஆண்டில், சுமார் 27.2 கோடி சர்வதேச புலம்பெயர்ந்தோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.