தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது இதுவரை தெளிவாகவில்லை. இந்நிலையில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுத்து வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைகோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆன்லைன் வகுப்புகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும்2019-20 மற்றும் 2020 -21 கல்வியாண்டுக்கான கட்டணம் செலுத்த பள்ளிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளன.
இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தனியார் பள்ளிகளை கண்காணிக்க வேண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்டிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.