tamilnadu

img

மீண்டும் ஹத்ராஸில் 6 வயது சிறுமி பாலியல்  படுகொலை

ஹத்ராஸில் உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
உத்திர பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் 6 வயது சிறுமி உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அச்சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை தகனம் செய்ய மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். 
ஏற்கனவே ஹத்ராஸில் 19வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.