புதுதில்லி, டிச.8- கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், ஐஐடி கல்லூரிகளைச் சேர்ந்த 27 மாணவர்கள் தற்கொலைசெய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சந்திர சேகர் கவுர் என்பவர் பெற்ற தகவலில் இது தெரியவந்துள்ளது. அதில், சென்னை ஐஐடியில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 7 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட தாகவும் அதிக தற்கொலைகள் நடைபெற்ற ஐஐடிகளின் பட்டியலில் சென்னையே முத லிடத்தில் உள்ளது. காரக்பூரில் 5 மாணவர்களும், தில்லி மற்றும் ஐதராபாத்தில் தலா 3 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டதாக தெரி விக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 ஐஐடிகளில் இந்த தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் மாணவர்களின் தற்கொலைக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.