மறைந்த முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் கடற்கரை காந்தி சிலை எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு நேருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலகண்ணன், கந்தசாமி, வைத்தியலிங்கம்,எம்.பி., உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.