புதுச்சேரி,நவ.4- வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. தில்லி தீஸ் ஹசாரி நீதி மன்ற வளாகத்தில் காவல்துறையினர் தாக்கியதில் வழக்கறிஞர்கள் காயமடைந்த சம்பவத்தை கண்டித்தும், தாக்குதலில் காயமடைந்த வழக்கறி ஞர்களுக்கு உரிய நிவார ணம் வழங்க வேண்டும். பணிபாதுகாப்பு கொடுக்க வேண்டும். தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி நீதிமன்ற வளாகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்து வேல் தலைமை தாங்கினார். அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட தால், 16 நீதிமன்றங்களின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.