tamilnadu

img

தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, டிசம்பர். 30- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரியில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடி யுரிமை திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். குடிமக்கள் பதி வேடு திருத்த முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சமூக நல்லிணக்க இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி. எச். பால மோகனன் தலைமை தாங்கினார். அகில இந்திய  ஒருமைப்பாட்டு சமாதான கழ கத்தின் புதுச்சேரி தலைவர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ., ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று துவக்கி வைத்து  பேசினார். இந்த போராட்டத் தில் இடதுசாரி கட்சித் தலை வர்கள் நாரா கலை நாதன்,  ராஜாங்கம், முருகன், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி  பஷீர், திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி தலைவர் வீர மணி, சமூக நல்லிணக்க இயக்க நிர்வாகிகள் அப்துல் ஹமீத்,  ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, கொளஞ்சி யப்பன்  உள்ளிட்ட ஜனநாயக  அமைப்புகளை சேர்ந்த வர்கள் திரளானோர்  தீப் பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

;