tamilnadu

img

புதுச்சேரி பட்டாசு ஆலையில் தீவிபத்து - 3 பெண்கள் பலிc

புதுச்சேரியில் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 புதுச்சேரி பாகூர் அடுத்த கரையாம்புத்தூர் ஏரிக்கரை ஒட்டிய அய்யனார் கோயில் அருகே பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை  மற்றும் குடோன் உள்ளது. இங்கு வெள்ளியன்று தீபாவளிக்காக பட்டாசு வெடிகள் தயாரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்றப்பட்டது. இந்த விபத்தில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரழிந்தனர். மேலும் 2 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இதுகுறித்து பாகூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெடி விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை இன்று  முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறும்போது, வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன். தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் நிதி உதவி பற்றி தற்போது தெரிவிக்க இயலாது " என்றார்.