புதுச்சேரி,பிப்.23- இடஒதுக்கீட்டு உரி மையை பாதுகாக்க சட்டப் பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அரசை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியு றுத்தியுள்ளது. சமூக நீதிக்கான அறப்போர் நூல் அறிமுக விழாக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பிர தேசச் செயலாளர் ஜி.ராம சாமி தலைமை தாங்கினார். நூல் குறித்து சவுத்விஷன் புக்ஸ் முதன்மை ஆசிரியர் த.நீதிராஜன் பேசினார். தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் புதுச்சேரி தலை வர் நிலவழகன், நிர்வாகி கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நீல கங்கா தரன்,மூர்த்தி, ரமேஷ், இராச.செயராமன், சரவணன், கொளஞ்சியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.