tamilnadu

img

புதுவை மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: சிஐடியு

புதுச்சேரி, நவ. 2- புதுச்சேரி அரசின் மின்துறையை தனியாருக்கு ஒருபோதும் தாரைவார்க்கக் கூடாது என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரதேச செயலாளர் ஜி.சீனுவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி மாநிலத்தில் அரசின் நேரடி  நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மின்சார  துறையை தனியார் மயமாக்க புதுச்சேரி  ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட் டணி அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு  சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களும்,  கடும் கண்டனம் தெரிவித்து  வலுவான போராட்டத்தை நடத்தின. இந்த  போராட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு கொடுத்தன. இந்நிலையில் மின்துறையை தனி யாருக்கு தாரை வார்க்கும் டெண்டரை ஆட்சியாளர்கள் வெளியிட்டனர். அரசின் முடிவுக்கு எதிராக கொதித்தெழுந்த புதுவை மக்களும், தொழிற்சங்கங்களும் மின்துறை ஊழியர்களோடு இணைந்து களத்தில் இறங்கி போராடினர். அதனைத்தொடர்ந்து, இந்த பிரச்சனை சம்பந்தமாக மக்களோடும், மின்துறை ஊழியர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி  ஒரு சுமூக முடிவுக்கு வருவோம் என்று    மின்துறை அமைச்சரும் அதிகாரிகளும் உறுதியளித்தனர். இதனால் போராட்டங் கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டன.  இந்த நிலையில், மின்துறை தனியார் மயமானால் சேவைகள் சிறக்கும் எனக் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் என்ரான் என்ற தனியார் கம்பெனி மின் துறையில் பேரிடர் காலத்தில் அனைத்தை யும் கைவிட்டு ஓடிவிட்டது என்பது போன்ற நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம். அரசு  நிர்வாகத்தில் அந்த மின்துறை செயல்படும்  போதுதான் மக்களுக்கான நலத்திட்டங் களை செயல்படுத்த முடியும். தனியார் என்பது லாபம் என்பதை குறிக்கோளாகக் கொண்டது.  எனவே, மின் துறையை தனியார்  மயமாக்கக் கூடாது என்கிற கோரிக்கையை  வலியுறுத்தி நடந்து வரும் போராட்டத்தை கணக்கில் கொள்ளாமல் தனியார் மயமானாலும், மின்துறை ஊழியர்களின் வேலை பாதுகாப்பை மட்டும் உறுதி செய்யும் வகையில் மின்சாரத்துறை அமைச்சர்  நமச்சிவாயம்  தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மின்துறை ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகளோடு மட்டும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். மின்சாரத் துறையை தனியார் மயமாக்குவது என்ற  கொள்கையை கைவிடுவது குறித்து அந்த  கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.  இந்த கூட்டத்தின் முடிவு சிஐடியு  உள்ளிட்ட  அனைத்து தொழிற்சங்கங்க ளுக்கும் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, புதுச்சேரி முதல்வர்  ரங்கசாமி உடன டியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு மின்சாரத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய  வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.