tamilnadu

அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி

புதுக்கோட்டை, மார்ச் 15- புதுக்கோட்டை மாவட்டம் நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் சமூக அறி வியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெறு வது எப்படி என்பது குறித்த சனிக்கிழமை யன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சை வேல் தலைமை வகித்தார். வடசேரிப் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சமூக அறி வியல் ஆசிரியர் சண்முகவேல், மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்களை வழங்கி, அரசு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெறுவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்தார். அவர் பேசுகையில், மாணவர்கள் மனம்போன போக்கில் போகாமல் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். புத்தக உருவத்தை பார்த்து பயந்துவிட கூடாது என்றார். முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்க, பட்டதாரி ஆசிரி யர் முருகன் நன்றி கூறினார்.