tamilnadu

img

நெல்மணிகள் தூவி காவிரியை வரவேற்ற விவசாயிகள்

அறந்தாங்கி, ஜூன் 21- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்லணைக் கால் பாய் கடைமடை பகுதியில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதற்காக 152 ஏரி, கண்மாய்களில் நீர் சேமிக்கப்படு கிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு 16-ம் தேதி கல்ல ணையை வந்தடைந்தது. அத னைத் தொடர்ந்து மிகுந்த எதிர் பார்ப்புடன் காத்திருந்த கடை மடை பகுதி விவசாயிகளுக்கு சனிக்கிழமை மதியம் மேற்ப னைக்காடு நீர்த்தேக்க நிலையை காவிரி நீர் வந்தடைந்தது.  இதனால் உற்சாகமடைந்த விவசாயிகள், பொதுமக்கள் நெல் மணிகள், நவதானியங்கள், பூக் கள் தூவி காவிரியை வரவேற்ற னர். காவிரி நீரானது கடைமடை பகுதி எல்லையான மும்பாலை வரை சென்ற பிறகு தொடர்ந்து அனைத்து ஏரிகளும் நிரம்பும் வரை தண்ணீர் தொடர்ந்தளிக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சி யில் மேற்பனைக்காடு ஊராட்சி தலைவர் மஞ்சுளா விஜயன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் தென் றல் கருப்பையா, மகேஸ்வரன்,  ஒன்றிய கவுன்சிலர் சிபிஎம், ஜோதிமேகவர்ணம் சிபிஎம் ஒன் றிய குழு உறுப்பினர் தர்மராஜ் மற்றும் மக்கள் கலந்து கொண்ட னர்.