புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா ஆலவயலில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதை ஆலவயல் மிராசு அழகப்பன் அம்பலம், பொன்னமராவதி ஒன்றிய பெருந்தலைவர் சுதாஅடைக்கலமணி, துணை பெருந்தலைவர் அ.தனலட்சுமிஅழகப்பன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.