tamilnadu

img

‘குடிமராமத்து’ செய்யப்பட்ட 100 ஏக்கர் குளம் உடையும் அபாயம்

புதுக்கோட்டை, டிச.1-  மாங்காடு கிராமத்தில் குடிமராமத்து பணிக்காக தடுப்பு வைக்கப்பட்டுள்ள குளம் கரை உடைக்கும் நிலையில் உள்ளதால் வரத்து வாய்க்கால்களை சீரமைத்து தண்ணீரை கொண்டு வந்த இளைஞர்கள், பொதுமக்கள் கவலையில் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங் களை தூர்வாரி சீரமைக்க தமிழக அரசு குடிமராத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 70  பணிகள் நடக்கிறது. இதில் ஒன்று கீரமங் கலம் அருகில் உள்ள மாங்காடு பெரிய குளம் என்கிற திருமுச்சி குளம். சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் தூர்வாரி, கரைகள் பலப்படுத்தி, மடைகள் கட்ட மைப்பதற்காக ரூ. 24 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குளம் கரைகள் சீரமைக்கப்பட்டு மடைகள் கட்டும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.  குளம் தூர்வாரினாலும் குளம் நிறைய தண்ணீர் கொண்டு வர உள்ளூர் இளைஞர்கள் முயற்சியில் பொதுமக்க ளின் பங்களிப்போடு சுமார் 3 கி.மீ தூரத்திற்கு வரத்து வாய்க்கால்களை சீரமைத்துள்ளனர். அதனால் கடந்த சில நாட்களாக பெய்யும் மழைத் தண்ணீர் குளத்தில் நிரம்பி வருகிறது. ஆனால் மடைகள் கட்டும் பணிக்காக வைக்கப்பட்டுள்ள மண் தடுப்புகள் மழையில் கரைந்து உடைப்பு ஏற்படும் நிலையில் உள்ளது. இந்த கரை உடைந்தால் அடுத்து மடைகள் கட்டப்படும் பகுதியும், நிரந்தரமாக இருக்க வேண்டிய கரையும் உடைந்து சேதமடைந்து தண்ணீர் வீணாகி வயல்பகுதியில் சென்றுவிடும்நிலை உள்ளது. சில நாட்கள் பலமாக மழை பெய்தால் உடைப்புகள் ஏற்பட வாய்ப்பு கள் உள்ளதாக கவலையுடன் கூறும் இளைஞர்கள் தண்ணீரை நிரப்ப  உழைப்பையும், பணத்தையும் கொடுத்து வாய்க்கால்களை தூர்வாரி னோம். ஒரே நேரத்தில் உடைத்துக் கொண்டால் உழைப்பும் பணமும் வீணாகிவிடும். அதனால் உடனடியாக  மணல் மூட்டைகளை அடுக்கி பலமான கரைகளை கட்ட வேண்டும் என்றனர்.