பொன்னமராவதி, ஆக.22- பூலாங்குறிச்சியில் குற்ற வாளிகளை காவல்துறையி னர் கைது செய்யாததை கண்டித்து காவல் நிலையம் முன்பு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி அருகே உள்ள சிவகங்கையில் பூலாங்குறிச்சியில் காஞ்சா த்து சாலையில் வசித்து வரும் சிங்காரம் மகன் செந்தில். இவர் கடந்த ஆக.1 அன்று தனது இருசக்கர வாகனத்தில் பூலாங்குறிச்சி கடைவீதி அருகே சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த பிரகாஷ் என்பவர் செந்திலை வழிமறித்து தாக்கி உள்ளார். இருவ ருக்குமிடையே வாய்த்தக ராறு ஏற்பட்டது. இதன் விளைவாக பிர காஷ், பவித்ரா, பழனிச்சாமி, பஞ்சு மற்றும் மச்சக்கண்ணு ஆகியோர் குடும்பத்தோடு சேர்ந்து காஞ்சாத்து சாலை யில் வசித்து வரும் செந்தில் மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினி ஆகியோரை பூலாங்குறிச்சி சாலையில் பொது இடத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இதில் கை எலும்பு முறிவு ஏற்பட்டு செந்தில் அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பூலாங்கு றிச்சி காவல் நிலையத்தில் செந்தில் தரப்பினர் புகார் மனு அளித்து 22 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத பூலாங்குறிச்சி காவல் துறை யினரை கண்டித்து உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி செல்வம் தலைமையில் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று உறுதியளித்த தையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.