tamilnadu

img

புதிய கல்விக் கொள்கை ஆபத்தும் அபத்தமும் மிகுந்தது -பேரா. அருணன் சாடல்

மதுரை, ஜூலை 31- மோடி அரசின் தேசிய வரைவுக் கல்விக் கொள்கை ஆபத்தும், அபத்தமும் நிறைந்தது. இருக்கிற கல்வியையும் பறிப்பது. அருகமைப் பள்ளிகளை மூடுவதற்கான முதல் கட்ட முயற்சி என்று பேராசிரியர் அருணன் கூறினார். மதுரையில் தேசியவரைவுக் கல்விக் கொள்கை-2019 திருத்தப்பட வேண்டியதா? திரும்பப் பெற வேண்டியதா? என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புற நகர் மாவட்டக்குழு சார்பில் செவ்வாயன்று கருத் தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேராசிரியர் அருணன் பேசியது:- தேசியக்கல்விக் கொள்கை வரைவு ஆபத்தும் அபத்தமும் நிறைந்தது. 484 பக்க அறிக்கையை வாசித்து ஒரு மாதத்தில் கருத்துக்கூற வேண்டு மென்றார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தவணை முறை நீட்டிப்பு கொடுத்து ஆக.15-ஆம் தேதி இறுதி நாள் என்று அறிவித்திருக்கிறார்கள். கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்துச் சொன்னால், கருத்துச் சொல்வதற்கு இவர் யார் என்கிறார் தமிழிசை. சூர்யாவின் கருத்து சரிதான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி னால் குழப்புவதாகக் கூறுகிறார் தமிழிசை. கல்விக் கொள்கை மூலம் மக்களைக் குழப்பிக்கொண்டி ருப்பது பாஜக தான். ஏழைகளின் கல்விக் கனவு பறிக்கப்பட்டுவிடக் கூடாது. எதிர்கால தலைமுறையும் பள்ளி,கல்லூரி களுக்கு செல்லவேண்டுமென நாம் விரும்புகிறோம். அதற்கு நேர்எதிராக பாஜக நிற்கிறது.  இந்தியாவில் கல்வியறிவில்லாதவர்கள் 30 கோடிப்பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு கல்வி கொடுப்பது பற்றி வரைவு அறிக்கையில் ஒன்றும் கூறப்படவில்லை. இருக்கிற கல்வியை யும் பறிப்பது தான் வரைவுக் கல்விக் கொள்கை. கல்விக்கொள்கை மொழி சுமை, தேர்வு சுமை, குவிப்பு சுமை ஆகிய மூன்றையும் குழந்தைகள் மீதும் பெற்றோர்கள் மீதும் சுமத்தியுள்ளது. மாண வர்கள் பள்ளியைவிட்டே ஓட வேண்டும். அதை பெற்றோர்களும் ஏற்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலை.

மொழிச் சுமை

பள்ளிகளில் மும்மொழிக் கொள்ளை அறி முகப்படுத்தப்பட்டால் விவசாயி உள்ளிட்ட பாட்டாளி வீட்டுக் குடும்பங்கள் என்ன செய்ய முடியும். இவர்கள் தமிழைத்தான் ஓரளவு அறிந்து வைத்திருப்பார்கள். ஆங்கிலத்திற்கும், இந்தி க்கும் சமஸ்கிருதத்திற்கும் தனியார் டியூசன் சென்டர்களை நாடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இவற்றை படிக்க முடியாத குழந்தை கள், அல்லது படிக்க வைக்க முடியாத குடும் பங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டார் கள். இதன் மூலம் இடை நிற்றல் அதிகரிக்கும்.

தேர்வுச் சுமை 
தற்போது 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் உள்ளன. இதை முடித்த பின் நேரடியாக கலைக் கல்லூரிகளுக்கு சென்று விடலாம். புதிய கல்விக் கொள்கையில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப் போகிறோம் என்கிறார்கள். இந்தப் பொதுத்தேர்வும் கூட 10, 12-ஆம் வகுப்புக்கு இணையானதாக இருக்குமென்கிறார்கள். இது குழந்தைகளை பள்ளிகளிலிருந்து விரட்டு வதற்கான ஏற்பாடாகும். 

குவிப்பு சுமை 
வரைவுக்கொள்கையில் பள்ளிகளை மூடு வது நோக்கமல்ல என்று கூறப்பட்டிருந்தாலும் ஆனால் நடக்கலாம் என சாதுர்யமாகக் கூறி யுள்ளார்கள். பள்ளிகள் இணைப்பு உள்கட்ட மைப்பு வசதியில்லை என்ற காரணத்தைக் கூறி யும், மாணவர்களின் வருகை குறைவாக இருக்கி றது என்ற காரணத்தைக்கூறியும் பள்ளிகளை ஒன்றோடொன்று இணைத்து பள்ளிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சி யும் நடைபெறும். மாணவர்கள் வருகை குறை வாக உள்ள பள்ளிகளை மூடி நூலகங்கள் அமைக் கப்போவதாகக் கூறுகிறார்கள். பள்ளிகளே இல்லையென்றால் நூலகங்கள் எதற்கு? அருகாமையிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டால் தொலைதூரங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச்  செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் அங்கு தங்கிப் படிப்பதற்கு விடுதிக்கட்ட ணம் செலுத்துவது யார் என்ற கேள்வியெழுகிறது? இந்தியாவில் சுமார் 40 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. இதில் 20 சதவீத கல்லூரிகளில் உட்கட்ட மைப்பு வசதியில்லை என்ற காரணத்தைக் கூறி அவற்றை மூடிவிடுவது. அதற்குப் பதிலாக இந்தியா முழுவதும் 200 பல்கலைக்கழகங்களை உருவாக்கி ஒவ்வொரு பல்கலை.யிலும் 200 மாணவர்களைச் சேர்ப்பது எனக் கூறப்படு கிறது. இந்த நிலை ஏற்பட்டால் மாநில அரசின் பட்டியலிலிருந்து மத்திய அரசின் பட்டியலுக்கு கல்வி சென்றுவிடும். “தரம்” என்பதை அடிப்ப டையாகக் கொண்டு கல்வி என்ற ஞானக் கண் அனைவருக்கும் தேவையில்லை என்பது தான் வரைவுக் கல்விக் கொள்கையின் நோக்கம்.

ஒரு மாவட்டத்திற்கு ஒரு உயர்கல்வி நிறுவ னம் போதுமென்கின்றனர். அப்படியென்றால் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங் கள் என்னவாகும்? 3-ஆம் வகுப்பு முதல் 17-வயது வரை அனைவருக்கும் தோட்டக்கலை, மண்பாண்டம், மரவேலை, மின்சார வேலைகள் போன்றவை கற்றுத் தரப்படும். 9, 10-ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கும் இந்தப் பயிற்சியளிக்கப்படும் என்கின்ற னர். கல்விக்கூடங்களில் பாடம் சொல்லித் தரு வார்களா? மாட்டார்களா? சாமானியர்களுக்கு கல்வியை மறுப்பது, குலக்கல்வியை கொண்டுவருவது தான் இவர்கள் நோக்கம்.  ஆபத்தும், அபத்தமும் நிறைந்த இந்தக் கல்விக்கொள்கையை எதிர்த்து ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குப்பின்னரும் நமது போராட்டம் தொடர வேண்டும் என்றார். கருத்தரங்கில் தமுஎகச தலைவர்கள் நா. முத்துநிலவன், மதுக்கூர் இராமலிங்கம் ஆகி யோர் உரையாற்றினர். கருத்தரங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் தலைமை வகித் தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத் தாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.