சென்னை, ஏப்.17- பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ள தமிழக அரசுக்கும் முதலமைச்ச ருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டியுஜே) நன்றி தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் அர சின் பலன்கள் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் புருஷோத்த மன் விடுத்துள்ள அறிக்கையில் , பத்திரிகையாளர்க ளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்க ளுக்கான அனைத்து மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் என்றும், எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் வரிசையில், மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகை துறையினரையும் ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு வெளி யிட்டுள்ள அறிவிப்புகளை வரவேற்கும் அதே நிலை யில், இந்தப் பலன்கள் அனைத்து பத்திரிகையா ளர்களையும் சென்றடைவதற்கு தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரி கையாளர் சங்கம் (டியுஜே) வலியுறுத்தியுள்ளது.
காரணம், அரசு அறிவித் துள்ள இந்த பலன்கள் அனைத்தும், அரசு அங்கீ கார அட்டை வைத்துள்ள பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகை நிறு வனத்தில் எத்தனை பேர் பணியாற் றினாலும், அந்த நிறுவனத்திற்கு அதிகபட்சமாக 10 அங்கீகார அட்டை களை மட்டுமே ஆண்டுதோறும் அரசு வழங்கி வரு கிறது. உதாரணத்திற்கு ஒரு பத்திரிகை நிறு வனத்தில் 100 பேர் பணியாற்றி னாலும், 150 பேர் பணியாற் றினாலும் அந்த நிறுவனத்தில் பணி யாற்றும் 10 பேருக்கு மட்டுமே அரசு அங்கீகார அட்டை வழங்கப்படுகிறது.
இந்த 10 அங்கீகார அட்டையில் 5 அட்டை களை அந்த நிறுவனத்தின் மூத்த ஆசிரியர் தொடங்கி உயர் பொறுப்பில் இருப்பவர்கள் வைத்துக்கொள்வது வழக்கமான நடைமுறையா கும். மீதமுள்ள 5 அட்டைகளும், அரசு நிகழ்ச்சி களில் கலந்துகொண்டு செய்தி சேகரிக்கும் செய்தி யாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் புகைப்படக்கலை ஞருக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இதில் ஒரு அட்டை கூட துணை ஆசிரி யர்கள், பிழை திருத்துபவர்கள், செய்தி வாசிப்பா ளர்கள், செய்தி தொகுப்பாளர்கள், படத்தொகுப்பா ளர்கள் என அலுவலகத்திற்குள் பணியாற்றும் தகுதி யான பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படுவ தில்லை. இந்நிலையில், அங்கீகார அட்டை உள்ள வர்களுக்கு மட்டுமே அரசு அறிவித்த பலன்கள் கிடைக்கும் என்ற நிபந்தனையால், இந்த பலன்களை பெரும்பாலான, உதவி பெறுவதற்கு தகுதியான பத்திரிகையா ளர்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, பத்திரிகையாளர்களுக்காக அரசு அறி வித்துள்ள பலன்களை பெறுவதற்கு, அரசு அங்கீகார அட்டை தேவை என்ற நிபந்தனையை அரசு தளர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.