சோதனைக்கு பிறகே பயணிகளுக்கு அனுமதி
நாகர்கோவில், மார்ச் 21- கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பிற மாநில எல்லைப்புற மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளில் தனியார் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அரசு பேருந்துகளில் வரும் பயணிகள் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையில் உள்ள 32 சோதனைச் சாவடிகளிலும் காவல்துறையினரும் சுகா தாரத்துறையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உணவுப்பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், மருத்துவ ஊர்திகள் ஆகியவை மட்டுமே இரு மாநி லங்களிடையே எல்லை தாண்டிச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. களியக்காவிளை யில் கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் தனியார் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றைக் காவல்துறை யினர் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பு கின்றனர்.அரசு பேருந்துகளைத் தடுத்து நிறுத்திப் பயணிகளுக்குக் கொரோனா அறி குறி உள்ளதா என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்கின்றனர். அதன்பின் பேருந்து களுக்குக் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
தென்காசி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான புளியரையில் உணவு, மருந்து ஆகிய இன்றியமையாப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டும் கேரளத் துக்கு அனுமதிக்கப்படுகிறது. இரு மாநில அரசு பேருந்துகளைத் தவிரப் பிற வாக னங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் கர்நாடக எல்லை யில் அமைந்துள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் தனியார் வாகனங்களும் பயணி கள் வாகனங்களும் அனுமதிக்கப்பட வில்லை. இன்றியமையாப் பொருட்களான மருந்து, பால், பெட்ரோல், டீசல், காய்கறி ஆகியவை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அவற் றுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். தமிழக-கர் நாடக எல்லைகள் மூடப்பட்டதால் பண்ணாரி சோதனைச்சாவடி வெறிச்சோடி காணப்படு கிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய ஊர்களில் ஆந்திர எல்லையில் உள்ள சோத னைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தமிழக ஆந்திர எல்லை களான பொன்னை, காட்பாடி, பேரணாம் பட்டு, குடியாத்தம், வாணியம்பாடி, நாட்றாம் பள்ளி ஆகியவற்றில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.