tamilnadu

img

தமிழக ஊடக தொழிலாளர் பணிப்பாதுகாப்பு, பணி நலன்களை உறுதி செய்திடுக!

தமிழக முதல்வருக்கு கடிதம்

மதுரை,மே 27-  தமிழக ஊடக தொழிலாளர் பணிப்பாதுகாப்பு மற்றும் பணி நலன்களை  உறுதி செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை மக்களவை உறுப் பினர் சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பி யுள்ளார். முதலமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: கோவிட் 19 பெரும் நெருக்கடியின் பின்புலத்தில் தமிழக காட்சி மற்றும் அச்சு ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன். 

காட்சி/ அச்சு ஊடக ஊழியர்கள் கோவிட் 19 நெருக்கடிக்கு மத்தியிலும் ஆற்றி வரும் அரும்பணி தாங்கள் அறிந்ததே. மக்கள் மத்தியில் கோவிட் 19 குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதிலும், அரசின் செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்ப்பதிலும் பெரும் பங்க ளிப்பை நல்கி வருபவர்கள் இவர்கள்.  ஆனால் ஊடக நிர்வாகங்கள் பணிநீக்கங்  கள், சம்பள வெட்டு ஆகிய நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றன. பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஆகும்.  அரசிடம் தொழில் நலன் காக்க ஆதரவு நாடும் இந்த நிறுவனங்கள், தத்தம்  தொழிலாளர்களிடம்  காண்பிக்கிற அணுகுமுறை ஏற்புடையதல்ல.  ஊடக தொழிலாளர் நலனை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என கருது கிறேன். உடனடியாக தாங்கள் தலையிட்டு தமிழக ஊடகங்களில் நிகழும் பணி நீக்கங்கள், சம்பள வெட்டு ஆகியவற்றை தடுத்து நிறுத்தி ஊடக ஊழியர் நலன் காக்க வேண்டும். தங்கள் உடனடி நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறேன்.