தேனி, ஆக. 1- கிராமப்புற வேலை திட்டத்தை முடக்கும் முயற்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ. லாசர், “ஏழை மக்க ளுக்கும் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களுக்கும் சமூக நலத் திட்டங்கள் முறையாக கிடைப்பதை உறுதி செய்திட தகுதியுள்ள அனை வருக்கும் உழவர் அட்டை கிடைப் பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என மாநிலக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்” என்றார். மத்திய பாஜக அரசும்-மாநில எடப்பாடி அரசும் ஒவ்வொரு குடும் பத்திற்கும் நூறு நாட்கள் வேலையை உறுதியாக வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளி லும் சட்டப்பூர்வ கூலியை வழங்க வேண்டும். அதேபோல், ஒரு ஊராட்சியில் குறைந்தது 400 வேலை அட்டை உள்ளது என்றால் சுழற்சி என்ற பெயரில் 50 நபர்க ளுக்கு தான் வேலை கொடுப் பதை கைவிட்டு அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அடுத்த மாதம் மாநிலம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என்றும் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.
சீரழிக்காதே?
நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் ரேசன் கடைகளில் ஏழை மக்க ளுக்கு விலை இல்லா அரிசி என்ற திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தையும் ஒழிக்க ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்ற பெயரில் சீர் குலைக்க மத்திய அரசு முயற்சிப் பதை கைவிட வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளதாகவும் லாசர் தெரி வித்தார்.