சென்னை, மார்ச் 28- தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக் கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண் டும் என முதலமைச்சர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கு தல் காரணமாகதமிழகத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. கொரோ னாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சென்னை ஓமந்தூரர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் கொரோனா மருத்துவ சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்து முதல்வர் பார்வையிட்டார். பின்னர் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளா கத்தில் உள்ள மாநில சுகாதார தலைமை கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு அங்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள் செவிலியர்களை பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறிய தாவது:-
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். முதியோர்கள், கர்ப்பிணிகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.
முதல் கட்டம்
தமிழகத்தில் கொரோனா பர வல் முதற்கட்டத்திலேயே உள்ளது. கொரோனா தொற்றை தடுக்க ஒரே வழி அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்வதே. கொரோனா ஒரு கொடிய தொற்று என்பதால் மக்கள் முழு ஒத்து ழைப்பை நல்க வேண்டும். தமிழகம் முழுவது 15ஆயிரம் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறினார். சென்னை, மற்றும் கோவை யில் கொரோனாவிற்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள் ளன. கோவை இஎஸ்ஐ மருத்து வமனை கொரோனா சிறப்பு வார்டுகள் கொண்ட மருத்துவ மனையாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.