tamilnadu

img

பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலை கோரி மனு...

பழனி:
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நெய்காரப்பட்டி பேரூராட்சி பகுதியில் 100நாள் வேலையை அமல்படுத்த கோரியும், சம்பளம் ரூபாய். 600 வழங்கிட கோரியும், முதியோர் பென்சன் ரூபாய். 3000 வழங்கிட கோரியும் மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஒன்றிய துணைச் செயலாளர் என். ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே. அருள்செல்வன், ஒன்றியசெயலாளர் எம். முருகசாமி, ஒன்றிய தலைவர் ஏ. இருளாயி, ஒன்றிய பொருளாளர் பி. முருகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர். தண்டபாணி, மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழனி ஒன்றிய செயலாளர் எஸ். கமலக்கண்ணன், விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் பி. செல்வராஜ், சவுக்கத்அலி, ஜாகிர் உசேன், பீர்முகமது, ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 300பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் 100நாள் வேலையை கேட்டு மனுக்கள் வழங்கப்பட்டது.