tamilnadu

img

ஓராண்டிற்கு புதிய திட்டமும் கிடையாது; நிதியும் கிடையாது

கொரோனாவிற்கு ‘செலவிட்டதால்’ மத்திய அரசின் சிக்கனமாம்

புதுதில்லி,ஜூன் 5- கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பெருமளவு நிதி  செலவிடப்பட்டு வருவதால் ஓராண்டிற்கு நிதியமைச்சகத்தின் சார்பில் வேறு எந்த திட்டமும் அறிவிக்கப்படாது என்றும் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கக் கோரி நிதி அமைச்ச கத்திற்கு  அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நிதித்துறை அமை ச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரூ.20 லட்சம் கோடி அளவிற்கு ஊக்கச் சலுகை திட்டத்தினை மத்திய அரசு அறி வித்துள்ளது.  மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இனி புதிய திட்டங்கள் இந்த நிதியாண்டு முழு வதும் அறிவிக்கப்படாது. அதேசமயம் பிரதமரின் காரிப் கல்யாண் தொகுப்பு மற்றும் ஆத்மனிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் வெளியிடப் பட்ட அறிவிப்புகளுக்கு மட்டுமே செலவு அனுமதிக்கப் படும். இவற்றை தவிர இந்த நிதியாண்டில் வேறு எந்த திட்டத் திற்கும் ஒப்புதல் அளிக்கப்படாது. புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்க கோரி நிதி அமைச்சகத்திற்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று அனைத்துத்துறை அமைச்சகங்களுக்கும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.