புதுதில்லி:
2020 - 21 நிதியாண்டின் முதல்பாதிக்கு உள்ளேயே, பட்ஜெட்டில்நிர்ணயிக்கப்பட்ட நிதிப்பற்றாக் குறை இலக்கை, இந்தியா தாண்டியுள்ளது. அதாவது, நிதிப்பற்றாக் குறை இலக்கில் 114.8 சதவிகிதத்தை தொட்டுள்ளது.வருவாய் மற்றும் செலவினங் களுக்கு இடையிலான இடைவெளி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் ரூ. 9 லட்சத்து13 ஆயிரத்து 993 கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய தலைமை கணக்குக் கட்டுப்பாட்டு (Controller General of Accounts - CGA) அதிகாரியின் வலைத்தள பக்க புள்ளிவிவரங்கள் கூறியுள்ளன.
2020-21 மத்திய பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை இலக்கு ரூ. 7 லட்சத்து 96 ஆயிரம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவிகிதம் ஆகும். ஆனால் இலக்கைத் தாண்டிரூ. 9 லட்சத்து 14 ஆயிரம் கோடியைத்(114.8 சதவிகிதம் பற்றாக்குறை) தொட்டுள்ளது.இதுவே கடந்த 2019 - 20 நிதியாண்டின் முதல் 6 மாதங்களில்பட்ஜெட் இலக்கில் நிதிப்பற்றாக் குறை 92.6 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.அரசாங்கத்தின் மொத்த வரிவருவாய் 21.5 சதவிகிதம் குறைந்துஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில் ரூ. 7 லட்சத்து 21 ஆயிரம் கோடியாகவும், இந்த காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட நிகர வரி வருவாய்ரூ. 4 லட்சத்து 58 ஆயிரம் கோடியாகவும் உள்ளது.இது ரூ. 16 லட்சத்து 35 ஆயிரம் கோடி என்ற பட்ஜெட் இலக்கில் 24 சதவிகிதம் குறைவாகும்.வரி வருவாயில், ரூ. 1 லட்சத்து 66 ஆயிரம் கோடி வருமான வரியாக வந்துள்ளது. இது கடந்த ஆண்டுவசூலான ரூ. 2 லட்சத்து 13 ஆயிரம்கோடியைக் காட்டிலும் 22 சதவிகிதம் குறைவாகும். கார்ப்பரேட் வரியாக ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிதான் வசூல்ஆகியுள்ளது. இது, கடந்த ஆண் டைக் காட்டிலும் 40 சதவிகிதம் குறைவாகும்.கடந்த ஆண்டின் ரூ. 4 லட்சத்து 69 ஆயிரத்துடன் ஒப்பிடுகையில், நேரடி வரி வசூல்- தற்போது ரூ. 3 லட்சத்து 24 ஆயிரம் கோடியே வந்துள்ளது. இது 27 சதவிகித குறைவாகும்.
இந்த காலகட்டத்தில் மத்திய அரசு வசூலித்த மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி மட்டுமேஆகும். இதுவும் கடந்த 2019 - 20 நிதியாண்டின் முதல் 6 மாதங்களைக் காட்டிலும் 34 சதவிகிதம் குறைவாகும்.சிஜிஏ தரவுகளின்படி, கடந்த 6 மாதங்களில் அரசாங்கம் செய்த மொத்த செலவு ரூ. 14 லட்சத்து 79 ஆயிரத்து 410 கோடி. இது 2020-21 பட்ஜெட் இலக்கில் 48.63 சதவிகிதம். ஆனால், கடந்த ஆண்டு இதே காலத்தில், பட்ஜெட் இலக்கில் 53 சதவிகிதம் (ரூ. 14 லட்சத்து 88 ஆயிரம் கோடி) செலவிடப்பட்டு உள்ளது.அதாவது, கடந்த ஆண்டைக் காட்டிலும், தற்போது நிதிப் பற்றாக்குறை அதிகரித்து இருந்தாலும், கடந்தாண்டை விட குறைவாகவே அரசு செலவிட்டுள்ளது.