tamilnadu

img

2020 - வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020 ஆம் ஆண்டு வேதியியல்  துறைக்கான நோபல் பரிசு  இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறை வாரியாக கடந்த அக்.5 திங்கள் கிழமை முதல் அறிவிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு,  மரபணு மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக பெண் விஞ்ஞானிகளான   இம்மானுவெல்லே சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றாக  CRISPR / Cas9 மரபணு கத்தரிக்கோலை பயன்படுத்தி, விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் டி.என்.ஏ.வை மிகத் துல்லியமாக மாற்ற முடியும்.  மூலக்கூறு அறிவியலில் இது புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, தாவர இனப்பெருக்கத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.  புற்றுநோய் சிகிச்சைகளுக்கும்,  பரம்பரை நோய்களைக் குணப்படுத்தவும் பெரிதும் பயன்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

வரும் தினங்களில் பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.