2020 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறை வாரியாக கடந்த அக்.5 திங்கள் கிழமை முதல் அறிவிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, ஆய்வாளர்கள் பால் ஆர்.மில்க்ரோம் மற்றும் ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஏலக் கோட்பாட்டை மேம்படுத்தி புதிய ஏல வடிவங்களை உருவாக்கியதற்காக இவ்விருவருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.